Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan அடமானம் வைத்து மீட்ட‌ நகையை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்!

அடமானம் வைத்து மீட்ட‌ நகையை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்!

0
14324

மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.மாதச்சம்பளம், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகை பூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். அப்போது பணம் பற்றாக்குறை நீங்கி செல்வம் பெருகும்.

தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

Previous articleஉங்கள் கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?கவனமாக இருங்கள்!
Next articleகடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்!