நீண்ட நாட்கள் பழங்களை கெட்டுப் போகாமல் நல்ல நிலையில் பாதுகாப்பது எவ்வாறு என்பதை பாா்ப்போம்,
* முதலில் வாழைப்பழங்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வாழைப்பழ காம்புகளை பிளாஸ்டிக் கவாினால் சுற்றிக் கொள்ள வேண்டும். இதனால் வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் 5 நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
வாழைப்பழம் விரைவாக பழுக்க வேண்டுமென்றால் ஒரு வாழியில் போட்டு மூடி வையுங்கள். அப்படி செய்தால் அதிலிருந்து எத்திலின் வாயு அதிகம் வெளியேறி, விரைவில் பழுக்கச் செய்யும்.
ஆப்பிள், பியேஸ், அவக்காடோ ஆகிய பழங்களை வெட்டிய பின்னா் நிறம் மாறாமல் இருக்க, அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றினை பூசி பிளாஸ்டிக் கவாில் இட்டு வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
மேலும் தக்காளியை அகன்ற ஒரு பாத்திரத்தில் பேப்பர் விரித்து அதை காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பராமரித்தால், நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.
குறிப்பாக தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் சுவைகெட்டுப் போய்விடும்.
By: Tamilpiththan