குஜராத்தை சேர்ந்த கொடூரன் ஆபாச படத்தை பார்த்துவிட்டு பெற்ற தாய்கே பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தினம் தினம் பெண்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சீறழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
அந்த சட்ட திருத்தத்தை சட்டமாக இயற்ற இன்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். ஆனால் நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.
குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவன் ராகுல். இவன் ஆபாச படங்களுக்கு அடிமையானவன்.
நீண்ட காலமாகவே ஆபாச படங்களுக்கு அடிமையான இவன் வீட்டில் இருக்கும் போது தாய் மற்றும் தனது 20 வயது தங்கை அருகில் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அவர்கள் முன்னரே ஆபாசம் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளான்.
இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்ற பின் வீடு திரும்பிய ராகுல் வீட்டில் ஆபாச படம் பார்த்துள்ளான்.
அதன் பின் அவனது தாய் உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்று அவருக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்துள்ளான் அந்த மனித மிருகம்.
இந்த கொடிய செயலை சற்றும் எதிர்பாராமல் திடுக்கிட்ட அவனது தாய் அந்த மிருகத்திடம் இருந்து தப்பிச்சென்று பொலிஸாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடைப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த கொடூரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.