பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே.
முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்கும் இடத்திலும், காடுகளிலும் இருப்பதை தான் அவதானித்திருப்போம். ஆனால் தற்போது சர்வ சாதாரணமாக சில மனிதர்கள் அதனை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருகின்றனர்.
இங்கு இளம்பெண் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு ஒன்றினை மிகவும் சாமர்த்தியமாக பிடித்தது மட்டுமின்றி பயமில்லாமல் அதனை பத்திரமாக பையில் போட்டு அசத்தியுள்ளார்.




