மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

0

மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினால் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தி வீழ்ச்சி காரணமாக மின் வெட்டு அமுல்படுத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் மின் உற்பத்தி நிலையங்களின் பிரதான நீரேந்து நிலைகளான விக்டோரியா, ரந்தெனிகல, கொத்மலை, காசல்ரீ, சமனலவெவ ஆகியனவற்றின் நீர் மட்டம் 50.2 வீதமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இந்தக் காலப்பகுதியில் குறித்த நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 35 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்!
Next articleஇலங்கை மக்களுக்கு அவரச எச்சரிக்கை!!!