குழந்தைகள் பெண்கள் என அனைவரும் இன்றைய காலத்தில் பாலியல் தொல்லையால் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
சிலர் பாலியல் தொல்லையால் கொலையும் செய்யப்படுகிறார்கள். இதற்கு குழந்தைகள், மற்றும் பொற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே ஒரு காரணமாக அமைகிறது.
சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு காட்சி
இந்நிலையில் குழந்தைகள் சிறு வயது முதலே ஆரம்ப பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கான தொல்லைகள் என்னவென்று அவர்களுக்கு ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதே இதற்கு ஒரு காரணம் என சொல்லலாம்.
மேலும் இது போன்ற பாலியல் சீண்டல்களிலிருந்து எப்படி குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ”மோதி விளையாடு பாப்பா” என ஒரு காணொளியை சமூக வலைத்தளத்தில் தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் இந்த காட்சி பலரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. எதிர் காலத்தில் பாலியல் குற்றங்களை எதிர்த்து முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என கூறி வருகிறார்கள்.