Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam காரில் குளிரூட்டிபயன்படுத்துபவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்!

காரில் குளிரூட்டிபயன்படுத்துபவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்!

0
605

கார் பயணங்களின் போது குளிரூட்டியினை பயன்படுத்தாமல் சிறிது தூரம் கூட பயணிக்க முடியாது என்கின்ற வகையில், குளிரூட்டியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. கோடைக்காலம் மட்டுமல்ல, அனைத்து காலத்திலும் காரில் குளிரூட்டி அமைப்பின் பயன்பாடு இன்று இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

கார் குளிரூட்டி அமைப்பை முறையாக கையாண்டால், பிரச்சனைகள் இல்லாத சுகமான பயணத்தை அனுபவிக்கலாம். கார் குளிரூட்டி அமைப்பை முறையாக கையாள்வதன் மூலமாக பல அனுகூலங்களையும் பெற முடியும்.

எந்தெந்த நேரத்தில் கார் குளிரூட்டியை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த சில வழிகாட்டி முறைகள் உள்ளன. கோடைக் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் போது கார் குளிரூட்டியை. பயன்படுத்துவதில் கவனம் தேவை. வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை இயக்க ஆரம்பித்தவுடன் குளிரூட்டியை இயங்க செய்தால், உடனே யன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

ஏனெனில் காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது. இதனால் குளிரூட்டியை இயங்க செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு யன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.

இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் குளிரூட்டியை இயக்கிவிட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் இயந்திரம் ஓடும்போது கார்பன் மோனாக்ஸைட் வெளியேறும். இது காருக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். தன்னியக்க குளிரூட்டி இல்லாத காராக இருந்தால், குளிரூட்டியை இயங்க செய்தவுடன் விசிறியின் வேகத்தை அதிகமாக வைக்கவும். அதேவேளையில்,காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப குளிரூட்டி வசதி இருந்தால் ஆரம்பத்தில் மின்விசிறி வேகத்தை குறைவாக வைப்பது நல்லது. பின்னர், மின்விசிறி வேகத்தை கூட்டிக்குறைத்துக் கொள்ளவும்.

Previous articleமன்னாரில் இதுவரை 102 மனித எச்சங்கள் மீட்பு!
Next articleநல்லூர் திருவிழாவிற்கு சென்ற இளைஞனுக்கு நடந்தது என்ன ?