Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா? தவறா?

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா? தவறா?

0
1836

நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..?

சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்.

என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்.

என்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்.. பூர்வபுண்ணியம், வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்.

விதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..!!!

Previous articleசுபகாரியம் செய்ய நல்லநாள் பார்த்து செய்யுங்கள்!
Next articleகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா? கொடுத்தால் என்ன ஆகும்?