தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கிருத்திகா. கார்த்திக் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கிருத்திகா கர்ப்பமுற்றார். அந்த நேரத்தில் எமனாய் வந்தார் கார்த்திக்கின் நண்பர் பிரவீன்.
பிரவீன் கார்த்திக்கிடம் உன் மனைவி கர்ப்பமாக உள்ளார். எல்லோரும் செய்வதைப் போல உன் மனைவியை மருத்துவமனை எல்லாம் அழைத்துச் செல்லாதே. காலம் மாறி விட்டது. அந்த காலத்தில் எல்லாம் பிரசவ காலத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார்களா? அல்லது மருத்துவமனை தான் சென்றார்களா? ஆகவே யூட்யூபை பார்த்து நாமே கிருத்திகாவிற்கு பிரசவம் பார்க்கலாம் என்று கூறி கார்த்திக்கின் மனதை மாற்றியுள்ளார் பிரவீன்.
இதுகுறித்து மனைவியிடம் கார்த்திக்கும் கூறியுள்ளார், முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த கிருத்திகா பின் சரி என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் நேற்று கிருத்திகா பிரசவ வலியால் துடித்திருக்கிறார். கார்த்திக் பதறிப் போய் நண்பன் பிரவீனை அழைத்துள்ளார். பிரவீன் யூட்யூபில் பிரசவம் செய்யும் வீடியோவை பார்த்தபடி கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை கொடூரமாக வெளியே இழுத்ததில் கிருத்திகா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தை படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.
இவரது இந்த செயலால் ஒரு உயிர் அநியாயமாக போய்விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.