வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்!

0

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற எந்தவொரு அமைப்பும் இல்லை என அருளானந்தம் அருண் என்ற இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார்.

ஆவா குழு சுமந்திரன், சரவணபவன், வித்தியதரன் ஆகியோரினால் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களை சட்டத்திற்கு முன்னாள் நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா என்ற குழுவை சிலர் உருவாக்கி கொண்டதற்கு யாழில் அப்படி ஒரு குழு இல்லை.

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாடுவதற்கு ஒரு சிறிய இடமேனும் இல்லை என்ற போதிலும் கொழும்பு பிரதேசத்தில் சிலர் நடப்பதற்கு உட்பட தனி இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Previous article4 மாத குழந்தையின் அவலநிலையைப் பாருங்க! சம்பவத்திற்கு பின்பு நடந்த திருப்பம்!
Next articleகடனாக கொடுத்த பணம் திரும்ப வரவில்லையா! இதை செய்தால் போதுமாம்!