பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி கலந்து கொண்டுள்ளனர்.
விவசாயத்தின் முக்கியத்துவத்தினை அனைவருக்கும் எடுத்து காட்டுவதற்காக டாஸ்க் ஒன்றினை தொகுப்பாளர் கோபிநாத் கொடுத்துள்ளார்.
அதில் வயிலில் இறங்கி போட்டியாளர்கள் அனைவரும் உழவு செய்கின்றனர். செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடியும் போட்டியில் கலந்து கொண்டு உழவு செய்துள்ளனர்.
இதன்போது ராஜலட்சுமிக்கு மயக்கம் வருவது போன்ற காட்சிகள் வெளியாகி பார்வையாளர்களை பதற்றமடைய வைத்துள்ளது. அது மாத்திரம் இல்லை, உழவு செய்வது மிகவும் கஷ்டம் என்று பதற்றத்துடன் தொகுப்பாளர் கோபிநாத் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஆதி காலத்தில் தமிழர்களின் வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக வேளாண்மை இருந்தது.
நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை.
பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம். விவசாயம் தற்போது அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அதனை மீட்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு தமிழனும் உள்ளான்.
அது மாத்திரம் இல்லை, ஒரு விவசாயி எவ்வளவு இன்னல்களை எதிர் கொள்கின்றான் என்பது பலருக்கு தெரியாது. இதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த எடுத்து காட்டாக உள்ளது.