பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தாடி பாலாஜி. அவரின் மனைவி நித்யாவும் இதில் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு ஒன்று சேர்வார்கள் என நினைத்துக் கொண்டிருந்த போதும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் தாடி பாலாஜி பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட போட்டியாளர்களை பற்றி பேசியுள்ளார்.
அதில், வீட்டில் பெண்கள் அனைவரும் கமல் இருக்கும் போதே சண்டையிட்டு கொள்வது சரியில்லை. அவர் சென்ற பின்னர் கூட இதை செய்திருக்கலாம்.
அபிராமியை இரண்டாவது நாளே எப்படி கவினிடம் காதலை சொல்ல முடியும்.
லொஸ்லியா ரொம்ப அமைதியான பொண்ணு, பட்டாம்பூச்சி போல பறந்து கொண்டே இருக்கிறார்.
தந்தையின் மேல் அந்த பொண்னு வைத்திருக்கும் பாசம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு என்று லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் தாடி பாலாஜி..
மேலும் ரொம்ப நாள் அவங்களும் அமைதியாகவே இருக்க முடியாது, ஏத்திவிட்டா அவங்க கோபத்தையும் இனிமே பார்ப்பீங்க என்று கூறியுள்ளார்.




