இயற்கை வைத்தியம் ரத்த சோகைக்கு உடனடி நிவாரணம் தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவை மூன்றையும் சம அளவு கலந்து காலை, மாலை இரு வேளையும் 30 மில்லி அளவு குடித்து வர ரத்தம் பெருகும், இந்த முறையைப் பின்பற்றி வந்தால் இதயம் வலுவடையும்.
கல்லீரல் பலம் பெறும். இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. தக்காளியை தினமும் பச்சையாக உட்கொண்டு வர சிறு வயதிலேயே ஏற்படும் முகச் சுருக்கங்கள் குணமாகும், சொரி, சிரங்குகளும் தீரும்.
தக்காளியை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வர பித்தத்தை சமப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும்.. தக்காளியை சாப்பிட்டு வந்தால் உடல் உள் உறுப்புகள் பலம் பெறும்.