யாழ் பல்கலை மாணவிக்கு நடந்த கொடூரம்! வீடியோ எடுத்ததால் வந்த விபரீதம்!

0
288

நேற்று யாழ் பல்கலை கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்று கொண்டிருந்த போது சிரேஸ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்களை அடித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது.

அதை மாணவி ஒருவர் வீடியோ எடுக்க முற்பட்ட போது அந்த மாணவியை சிரேஸ்ட மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து தாக்குதலுக்குள்ளான மாணவி உடனடியாகவே பல்கலைக்கழக மார்சலிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த மார்சல் குறித்த வரவேற்பு நிகழ்வை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உரிமைக்காக குரல் கொடுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சாதாரண விடையமாகிவிட்டது.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 05.04.2019 வெள்ளிக்கிழமை !
Next articleஇலங்கையை நெருங்கியது பேராபத்து! மக்களுக்கு அபாய எச்சரிக்கை!