பதின்மூன்றுவயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம் என்றும் அது சமூகத்துக்குஅச்சுறுத்தல்விடுக்கும்சம்பவம்என்றும்யாழ்ப்பாணம்நீதிமன்றநீதவான்அந்தோனிசாமி பீற்றர் போல் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு சந்தேகநபரின் பிணை மனுவையும்நிராகரித்தநீதவான்குறித்தநபரின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியில் பதின்ம வயதுச்சிறுமியைவன்புணர்வுக்குஉட்படுத்தினார்என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்தந்தையால்முறைப்பாடுவழங்கப்பட்டது.இதனை அடுத்து சந்தேகநபரை நேற்று முன்தினம்திங்கட்கிழமைவான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்ததுடன்அவரது வானையும் கைப்பற்றினர்.
சிறுமியை பலாத்காரம் செய்த விடயத்தில்,சிறுமியின்வாக்குமூலப்படி,அந்த பாதகச் செயலில்சம்பந்தப்பட்டாககுறிப்பிடப்பட்டுள்ளது.இதே வேளை குறித்தசம்பவம்சார்பாகசட்டத்தரணிகள்ஆயராகுவதைதவிர்த்துக்கொள்ள வேண்டும் என சமூகஆர்வலர்கள்வேண்டுகோள்விடுத்திருந்தநிலையில்சந்தேகநபர்சார்பில்மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாமுன்னிலையானார்.
சந்தேகநபர் சார்பில் அவர் பிணைவிண்ணப்பத்தைமுன்வைத்தார்.சந்தேக நபருக்கும்இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியைதாயாரின்அனுமதியுடனேயே3 தடவைகள்வெளியில்அழைத்துச்சென்றார்.அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்தசட்டத்தரணிஎன்.சிறிகாந்தா மன்றுரைத்தார்.
சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தைஆராய்ந்தயாழ்ப்பாணம்நீதிமன்றநீதிவான்அந்தோனிசாமி பீற்றர் போல், பதின்மவயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்குஅச்சுறுத்தல்விடுக்கும்சம்பவம்.அத்துடன்சந்தேகநபருக்குஎதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை. அதனால் பிணைவிண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டிசந்தேநபரைவிளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்
இதே வேளைகுறித்தசிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டமை தொடர்பாக யாழில் உள்ளஎந்த ஒரு மகளீர்அமைப்புக்களோ,அரசியல்வாதிகளோகவனத்தில்கொள்ளவில்லைஎன சமூக ஆர்வலர்கள்கவலை தெரிவித்துள்ளனர்.





