வீட்டுத்தகராறின் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று மலையகத்தின் பொகவந்தலாவையில் இடம்பற்றுள்ளது.
பொகவந்தலாவயின் செல்வகந்த தோட்டப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முப்பத்தொன்பது வயதான ஸ்ரீதரன் ரஜீவ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் தனது படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.