கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். ஜெர்ரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சதீஷ், ஆர்யா நடிப்பில் வந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் பிரபலமானார்.
கடந்த காலங்களில் சதீஷ் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்தன, புகைப்படமும் வெளிவந்தது. ஆனால் அது திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படம் என தெரியவந்தது. இந்த நிலையில், சதீஷ் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படங்களைக் கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து விரைவில் திருமணம் நடைபெறுமென ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Make a Comment




