சன்டிவியில் ஒளிப்பரப்பாக்கி வரும் நாயகி சீரியலின் கதாநாயகியாக தற்சமயம் நடித்து வருபவர் வித்யா ப்ரதீப். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார்.
அதில், எனக்கு வாட்சப்பை விட லெட்டர்பேட் தான் பிடிக்கும். ஆனால் அவற்றை எல்லாம் தற்சமயம் உபயோகிப்பது இல்லை. ஆனால் எனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வரும் கமெண்ட்களை எல்லாம் ஆவலுடன் படிப்பேன்.
அதில் சில பயங்கர எமோஷ்னலாக இருக்கும். நிறைய லவ் சம்பந்தப்பட்டவையாக தான் இருக்கும். நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன், எனது அப்பாவின் சம்பளம் இவ்வளவு, வீடு உள்ளது என தனது முழு பயோடேட்டாவையும் பெரிய பெரிய பத்தியில் டைப் செய்து அனுப்பியிருப்பர். அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஷாக்காக தான் இருக்கும். எப்படி இவ்வளவு டைம் எடுத்து டைப் பண்ணி அனுப்பிகிறார்களோ என்று தெரியவில்லை என்றார்.