படுக்கையை பகிர்ந்தது குறித்து வெளிப்படையாக பேசிய ஸ்ரீரெட்டி தற்போது நான் தோற்று போய்விட்டேன் எனக் கூறி கண்கலங்கியுள்ளது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக இணையத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வரும் விடயம் நடிகை ஸ்ரீரெட்டி லீக்ஸ் தான்.
இந்நிலையில், தற்போது பிரபலங்களுடன் தனது படுக்கையை பகிர்ந்ததற்கான காரணம் குறித்து தற்போது ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார்.
அதில், இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணமே நடிகை த்ரிஷா தான் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார்.
தெலுங்கின் முன்னணியில் இருக்கும் நானி முதல் தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ரீகாந்த் வரை பலருக்கு தன்னையே தான் விருந்து வைத்துள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீரெட்டி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிரபலங்களின் புகைப்படங்களைப் பார்த்து அவர்களைக் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்ட போது, தெலுங்கு சினிமாவின் சிறந்த நடிகரான நானியின் புகைப்படத்தைப் பார்த்து ஆத்திரமடைந்து முருகதாஸ், லாரன்ஸ் போன்றவர்களுக்காவது சிறிது மரியாதை கொடுப்பேன். ஆனால் உண்மையில், இவரைப் பற்றி பேச எனக்கு சுத்தமாக பிடிக்கவில்ல்லை. தயவு செய்து புகைப்படத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பவன் கல்யாண் அம்மாவின் புக்கைப்படத்தைப் பார்த்து நான் தப்பு பன்னிட்டேன், என்னை மண்ணித்து விடுங்கள். உங்கள் மகனை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
என் முகம், உங்கள் காலில் எனக் கூறி மண்ணிப்பு கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, உங்களது பெற்றோரைப் பற்றி கூறுங்கள், அவர்களிடம் நீங்கள் போக ஆசைப்படுகிறீர்களா என்று தொகுப்பாளினி கேட்ட போது, இல்லை எல்லாம் முடிந்துவிட்டது, எப்படி அவர்களுக்கு சொல்வேன். நான் தோற்றுவிட்டேன். என்று கூறி கண்கலங்கியுள்ளார்.
என் வாழ்க்கை போய்விட்டது, முடிந்தவரை மாற்ற வேண்டும் என்று தான் போராடுகிரேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.