இயற்கை பல ரசியங்களை தன்னிடம் கொண்டுள்ளது. இவற்றை நம்மால் வெளிப்படுத்த முடியாது. இயற்கையின் சில படங்கள் எளிதாக நம்மை பயமுறுத்தி மூச்சைத் திணறடிக்கும் விதமாக இருக்கும். சில படங்கள் பயத்தில் நம்மை மூழ்கடித்து கெட்டக் கனவுகளை உண்டாக்கும்.
சில படங்கள் இயற்கையின் சக்தியை நினைத்து வியக்க வைக்கும். இந்த பதிவில் நாம் சில ஆச்சர்யத்தையும், சில பயத்தையும் காணலாம்.
ஆந்தை கண்கள்
ஒரு ஆந்தையின் காது வழியாகப் பார்த்தால், ஆந்தையின் கண்கள் தெரியும் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இந்த படத்திற்கு இன்னும் அதிக விளக்கம் தேவையில்லை.
பல்லிகளின் பகுதி
பல்லிகளின் பிறப்பில் பல்வேறு வகை உள்ளது உங்களுக்குத் தெரியுமா? சில வகை பல்லிகள் முட்டையிட்டு குஞ்சு வரும். சில வகை பல்லிகள் பிரசவித்து குஞ்சுகளை வெளியிடும். இந்த அலமாரி பல்லிகளின் சரணாலயம் என்பது மட்டும் இந்த படத்தின் மூலம் புரிகிறது.
தேரைகளின் பயணம்
தேரை என்பது தவளை போன்ற உருவத்தில் காணப்படும் . அவை பயணம் செய்யத் திட்டமிட்டு 3.5மீ நீளம் உள்ள பைதான் மீது ஏறி அமர்ந்துள்ளன. இந்த பாம்பும் மிக சந்தோஷமாக இந்த பயணத்தை ஏற்றுக் கொண்டு தேரைகளுடன் பயணிக்கிறது.
பல்லியின் கண்ணாமூச்சி ஆட்டம்
அண்டார்டிகா தவிர உலகின் எல்லா பகுதிகளிலும் காணப்படும் பொதுவான ஒரு ஊறும் பிராணி, பல்லி. தன்னைக் கொல்ல வருபவரிடம் இருந்து மறைந்து கொள்ள இந்த ஊறும் பிராணி உருமறைப்பு வித்தையைப் பயன்படுத்தும். இந்த பல்லி சிலந்தி பொம்மைக்குள் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுவதைப் பாருங்கள்.
மனித முகத்தை ஒத்த சிலந்தி வலை
இது மனித முகத்தைப் போல் காணப்படும் ஒரு சிலந்தி வலை. ஆனால் இந்த வலையைப் பின்னியது சிலந்திகள் தான் என்பதில் பொய்யில்லை.