சினிமாவை தொடர்ந்து தற்போது சீரியல் உலகில் முன்னிலையில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். பல சீரியல்களில் நடித்தும், தயாரித்தும் வருகிறார்.
இதற்காக அவர் ராடன்ஸ் மிடியா நிறுவனத்தை தன் கணவர் சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர்கள் அண்மையில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும். அது பவுன்ஸ் ஆகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை உயர்நீதிமன்றம் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லையாம். இதனால் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணை வரும் ஜூலை 12 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.




