திருகோணமலை, அக்போபுர பகுதியில் 12 வயதுடைய சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை – அக்போபுர, அக்போகம பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரையே இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் 12 வயதுடைய சிறுமி சந்தேகநபரின் வீட்டுக்கு விளையாடச் செல்லும் போது குறித்த நபர் சிறுமியை அழைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டியுள்ளார்.
இதை சிறுமி இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து பெற்றோர் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.