கோவிலில் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த சிறுவன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

0
506

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சிறுமியிடம் அத்துமீறியதாக சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலி மாவட்டத்தில் 4 பேர் சேர்ந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் கடந்த சனிக்கிழமை அந்த சிறுவன் கோவில் ஒன்றில் சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அதனாலேயே கிராம மக்கள் அந்தச் சிறுவனை தாக்கியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினரும், கிராமத்தினரும் இரு புகார்களை காவல் நிலையத்தில் அளித்தனர். அதன் பேரில் சிறுவனைக் கைது செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரத்தில் சிறுவனை தாக்கியது தொடர்பாக 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

முதலில் கோவிலுக்குள் நுழைந்த காரணத்தினால் அந்த சிறுவன் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் நடைபெற்ற விசாரணையில் தான் கோவிலில் குறித்த சிறுவன் சிறுமி ஒருவருடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது.

Previous articleதொடரும் தற்கொலைகள்! தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்திய மரண சம்பவம்!
Next articleகண்ணாடி உடையில் பலரின் கண்களை பறித்த ஸ்ருதி ஹாசன்! லேட்டஸ்ட் கிளாமர் லுக்!