கண்கலங்கிய படி வெளியேறிய தர்ஷன்… கதறிய சாண்டி, லொஸ்லியா! மேடையில் பேசியது என்ன?

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது இறுதிவாரம் என்பதால் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார்.

தற்போது கவின் 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மீதம் இருக்கும் தர்ஷன், ஷெரின், சாண்டி, லொஸ்லியாவில் இன்று யார் வெளியேறுவார் என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே வந்தது.

பின்பு இந்த வாரம் எலிமனேஷனில்ஷெரின் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேறியது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் #Redlightvijaytv என்ற என்ற அஷ் டேக்கை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் டேக் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மாலை 6.30 மணிக்கே துவங்கியது. இந்த வாரம் தர்ஷன் வெளியேறினார் என்று கமல் அறிவித்ததும் தர்ஷன் மத்தியிலும் போட்டியாளர்கள் மத்தியிலும் பெரும் அமைதியும் அதிர்ச்சியும் நிலவியது.

பின்பு மேடைக்கு வந்த அவருக்கு ரசிகர்கள் பயங்கர வரவேற்பு அளித்தனர். கமல் மக்கள் ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் இருப்பினும் தாங்கள் வந்த வேலையை முடித்துவிட்டீர்கள் என்று கூறினார். அதற்கு தர்ஷன் இந்த ஒரு வார்த்தையே போதும் சார் என்று கூறினார்.

பின்பு மீண்டும் தர்ஷன் பேசுகையில், இது கடவுள் கொடுத்த வாய்ப்பு, இதைத் தாண்டினால் நான் ஊருக்கு தான் செல்ல வேண்டும் என்று நினைத்ததாக கூறிய அவர், வனிதாவை எதிர்த்து பேசியுள்ளதாகவும், அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டதாகவும், நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் தனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். முகெனை பார்க்கும் போது நான் பட்ட கஷ்டத்தை பார்ப்பது போல தான் இருந்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Previous articleபிக்பாஸ் போட்டியில் ஈழத்து தர்ஷனிற்கு எதிர்பாராத முடிவினை அறிவித்த பிக்பாஸ்? அதிர்ச்சியில் ரசிகர்கள் !
Next articleசாலையில் தவறான வழியில் சென்ற பேரூந்தை சரியான வழிக்கு திருப்பிய தைரியமான பெண்.