அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் சுக்கிரன் எங்கே இருந்தால் எந்தமாதிரியான மனைவி உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வருவார்!

0

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது.

மேஷத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள், ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்க்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள். ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தம் உள்ள மனைவியாக இருப்பாள். உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் மனைவி இருப்பாள். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவார், தான் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்பமாட்டார். மனைவி ஒரு போதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டார். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.

ரிஷபத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி அழகானவளாகவும், ஆடை அலங்காரப்பிரியையாகவும், சொகுசு விரும்பியாகவும், செல்வ செழிப்புடையவளாகவும் இருப்பாள். திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி பெயர்ந்து செல்ல முயற்சிப்பாள். வீட்டை அழகாக வைத்திருப்பாள். அதிகம் வெளியே செல்லமாட்டாள். தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தமாக தங்கிவிடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்.

மிதுனத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நட்பு விரும்பியாகவும், புத்திசாலியாகவும், இளமையான தோற்றமுடையவளாகவும், சுறு சுறுப்பானவளாகவும் , தோற்றத்தில் ஜாதகனை விட மிகவும் இளையவள் போன்றோ அல்லது வயதில் மிகவும் இளையவளாகவோ இருப்பாள். ஜாதகனுக்கும் அவன் மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும்.

கடகத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி தாய்மை உணர்வு அதிகம் உடையவளாக இருப்பாள். மனைவி அழகானவளாகவும்,மன சஞ்சலம் உடையவளாகவும், பாசத்திற்கு அடிமையாகவும் இருப்பாள். மனைவிக்கு அவள் பிறந்த வீட்டில் மரியாதை இருக்காது. பிறந்த வீட்டில் அவளை அன்னியப்பெண் போன்று நடத்துவார்கள். மனைவி சொந்தமில்லாமல் அன்னியப்பெண்ணாக இருப்பாள். மாமியார் வசிக்கும் வீட்டிலும் இவள் இருக்க மாட்டாள், தனிக்குடித்தனம் செல்வதையே பெரிதும் விரும்புவாள். மாமியார் , தாய் , அக்கா, அண்ணி இவர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாள். அடுத்தவர் வீடுகளில் தங்குவதை அவமானமாக நினைப்பாள்.

சிம்மத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நிர்வாக திறமை உடையவளாகவும், பிறந்த வீட்டில் ராணி போலவும் இருப்பாள். மனைவி தந்தை வழி உறவினளாக இருக்க வாய்ப்புண்டு. பிறந்த வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை வாங்குவாள். பெற்ற பிள்ளைகளை பராமரிக்க மாட்டாள், பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டு வளர்ப்பாள்.தன்னை எல்லோரும் தலைவி போல் பாவிக்கவேண்டும் என விரும்புவாள். தந்தை வழி சொத்துக்கள் தனக்கே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள் அல்லது தாய் வீட்டிலிருந்து எப்பொழுதும் எதையாவது எடுத்துக்கொண்டு போவதை வழக்கமாக வைத்திருப்பாள்.

கன்னியில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவளாகவோ அல்லது ஜாதகனை விட வயதில் மிகவும் இளையவளாக இருப்பாள். ஆடை அலங்காரத்தில் மனைவிக்கு அக்கரை இருக்காது. தனது உடமைகளை பிறருக்கு விட்டுக்கொடுப்பாள். எளிமையாக இருப்பாள்.

துலாத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி அழகானவளாகவும், ஆடை அலங்காரப்பிரியையாகவும், எதையும் சீர் தூக்கிப்பார்த்து சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளவளாகவும் இருப்பாள். தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி பெயர்ந்து செல்ல முயற்சிப்பாள். யாரையும் உபசரிக்கமாட்டாள். வீட்டை அழகாக வைத்திருப்பாள். அதிகம் வெளியே செல்லமாட்டாள். தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தமாக தங்கிவிடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும்.

விருச்சிகத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவள். ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தம் உள்ள மனைவியாக இருப்பாள். உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் மனைவி இருப்பாள். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவார். தான் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்பமாட்டார். மனைவி ஒரு போதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டார்.

தனுசு ராசியில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான, அமைதியான தோற்றத்தில் இருப்பாள். தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாகவும் இருக்க வாய்ப்புண்டு. அல்லது மனைவி உடல் பருத்தவளாக இருப்பாள். மனைவி சொந்தக்காரியாக இருக்க வாய்ப்புண்டு. மனைவி தன் வீட்டிற்கு யாரும் வந்து போவதை விரும்ப மாட்டாள் . தனிக்குடித்தனம் செல்வதையே விரும்புவாள். மனைவி அவசியம் இல்லாமல், காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டாள்.

மகரத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நல்ல உடல் உழைப்பாளியாக இருப்பாள். அடக்கமானவளாகவும், எளிமையானவளாகவும் இருப்பாள். முதிர்ச்சியான தோற்றம் இருக்கும். அவள் காரியவாதியாகவும் இருப்பாள். மனைவி சொந்தமில்லாமல் அன்னியப்பெண்ணாக இருப்பாள்.மனைவி அடுத்தவர்களுக்கு சேவகம் புரிந்து காரியம் சாதிப்பாள்.

கும்பத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி காரியவாதியாக இருப்பாள். ஆதாயம் தேடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடமாட்டாள். யாரிடமிருந்து எதைப்பெறலாம் என்பதிலியே குறியாக இருப்பாள். அடுத்தவர்களிடம் உதவி கேட்பதற்கு கூச்சப்படமாட்டாள். அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் எல்லோரையும் வேலை வாங்குவாள். தனது பணிகளை பிறர் மீது திணிப்பாள். முதிர்ச்சியான தோற்றமுடையவளாக இருப்பாள். மனைவி தோழிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து அரட்டை அடிப்பாள். மனைவி சொந்தமில்லாமல் அன்னியப்பெண்ணாக இருப்பாள்.

மீனத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான, அமைதியான தோற்றத்தில் இருப்பாள். தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாகவும் இருக்க வாய்ப்புண்டு. அல்லது மனைவி உடல் பருத்தவளாக இருப்பாள். மனைவி சொந்தக்காரியாக இருக்க வாய்ப்புண்டு. மனைவி அடுத்தவர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வாள். அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று அதிகாரம் செய்வாள். மனைவி ஆடம்பர பிரியையாகவும் , பேராசைக்காரியாகவும் இருப்பாள். பிறர் பொருளை அபகரிப்பாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க ராசிக்கு மிக பொருத்தமான ஜோடி ராசி எது ? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 8.4.2018