காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த பகுதியை சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடுசெய்யப்படவுள்ளது.
இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக்கொண்டதாக இந்த கைத்தொழிற்பேட்டையை அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.
இதேவேளை காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை யுத்த சூழ்நிலைகளால் சேதமாகி தடைப்பட்டிருந்த நிலையில் அதனை மீளவும் ஆரம்பிப்பதற்கான முயற்சி கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்லப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையில் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கக்கூடாது என அப்போதையை மாகாண விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசனால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.