பிரபலங்களின் மரண செய்தி என்றாலே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் திருச்சூரில் உள்ள கோயிலுக்கு மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வி ஆகியோருடன் காரில் சென்றுள்ளார்.
வழிபாடு முடிந்து வீடு திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்ன குழந்தை இறந்துவிட்டது. பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.