மக்களுக்காக இலங்கை இராணுவத்தினர் அவசர இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அவசரமான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் தகவல் வழங்குவதற்காக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
113 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என, இராணுவத்தினர் தெரிவித்தனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் தெரிவித்தனர்.