நம்மை சுற்றி சில வினோதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. மருத்துவ துறையிலும் சில அதிசய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
மும்பையில் தற்போது விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு குழந்தை இல்லை என மருத்துவமனை சென்றுள்ளார்.
இதனால் மருத்துவர்கள் அவரின் விந்து அணு பரிசோதனை செய்தனர். அதில் உயிரணுக்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. விந்தணுக்கள் குறைவு ஏற்படலாம் ஆனால் இல்லாமல் இருப்பது எப்படி சாத்தியம் என ஆராய்ச்சியில் இறங்கினர்.
சம்மந்தப்பட்ட நபரின் அடிவயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்த போது உள்ளே பெண்களை போல கர்ப்பப்பையும், கர்ப்பப்பை குழாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர்.
இதனால் அதான் அவருக்கு விந்தணு உற்பத்தியாகவில்லை என்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அதை ஆப்ரேசன் மூலம் அகற்றியுள்ளனர்.
இனி அவருக்கு உயிரணுக்கள் உற்பத்தியாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என JJ மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர்.




