அதிர்சியில் ஊர் மக்கள்: மட்டக்களப்பில் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்!

0
540

மட்டக்களப்பில்:
இனப்படுகொலையாளிகளான சிறீலங்கா இராணுவ சிப்பாய்களால் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 18 ம் திகதி குறித்த சிங்கள சிப்பாய்கள் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்று கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் பதின்மூன்று மற்றும் பதினைந்து வயதினை உடையவர்கள் என தெரியவருகின்றது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சிங்கள இராணுவ சிப்பாய்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கூடாது என இராணுவத்தின் உயர் அதிகாரிகள் அச்சுறுத்திவருகின்றனர்.

குறித்த சிறுமிகள் பள்ளிக்கு சென்று திரும்புகையில் கடத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் தேடி வந்த கிராமவாசிகள் மாலை 6 மணியளவில் அவர்களை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாணவிகள் கல்வி கற்கும் பள்ளி மற்றும் மருத்துவமனை ஆகியவை சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரத்திற்கு வடக்கே 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனிச்சங்கேணி சந்தியாகும்.

இந்த விடயத்தை கதைப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் அச்சப் படுகின்றனர். என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபாதாமை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? இலகு செய்முறை
Next articleசிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்!