பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் சிலர் உண்மையாக இருக்குமோ என யோசிக்கின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து முதன்முதலாக வைரமுத்துவின் இரண்டாவது மகன் கபிலன் ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து அதிரடியாக பேசியுள்ளார் பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து. அதில் அவர், ஒரு பெண்ணை தானே அறைக்கு அழைத்தார், ஆமாம் கூப்பிடுவார், ஆம்பளை தானே அவர், உனக்கு இஷ்டம் இருந்தால் போ இல்லையென்றால் பத்திரிக்கையில் சொல்லு, சொல்லிட்டு போ. அவரும் ஆம்பளை, ஹார்மோன்ஸ் அவருக்கு இருக்கிறது, பெண்ணை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று இருக்கும்.
இன்னும் கொஞ்ச நாளில் இதை மறந்துவிடுவோம், இதனால் கவிஞருக்கு என்ற ஒரு கெட்ட பெயரும் இல்லை, பெண்ணை தானே கூப்பிட்டார், ஆம்பளையை கூப்பிட்டால் தான் தவறு என அதிரடியாக பேசியுள்ளார்.