Home Jaffna News அண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி! முல்லைத்தீவில் சோகம்!

அண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி! முல்லைத்தீவில் சோகம்!

0
364

முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வீட்டுக்கு அண்மையில் உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள மரம் ஒன்றிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டவர்கள் உயிரிழந்த இளைஞரின் வீட்டாருக்கும், காவல்துறையினரும் அறிவிக்கப்பட்டது,

சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அதே வேளை 2வருடங்களுக்கு முன்னர் இதே மரத்திலேயே தற்போது உயிரிளந்தவரின் அண்ணனும் தூக்கில் தொங்கி இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleலண்டன் ரயில்வே நிலையத்தில் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து கொட்டிய பண மழை!
Next articleஜீ.வி.பிரகாஷின் தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்! அவரது அழகிய புகைப்படங்கள்!