அடிக்கடி தெலங்கானா செல்லும் சரத்குமார் – ராதிகா – இதற்காகத்தானாம்!

0
333

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் தனது மனைவி ராதிகாவை அழைத்துக் கொண்டு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தன் பின்னணி தற்பொழுது வெளியாகி உள்ளது.

தமிழிசை ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட போது தனது மனைவி ராதிகாவுடன் அந்த விழாவில் கலந்து கொண்டார் சரத்குமார்.

அதேபோல சரத்குமார் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியதை பாராட்டி ’காமராஜருக்கு மணிமண்டபத்தை அமைத்து சரத்குமார் சாதனைக்குமாராக மாறியுள்ளார்’ என தமிழிசை பாராட்டினார் .

இப்படி ஒருவரை வருவர் பாராட்டிக் கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் 2017ல் சரத் குமாருக்கு நடந்த வருமான வரித்துறை சம்பவத்துக்கு பிறகு தான் என்கின்றார்கள்.

கடந்த 2017 ஆர்.கே.நகர் தேர்தல் நெருக்கடியில் நடிகர் சரத்குமாரையும் வளைத்த விசாரணை அதிகாரிகள் அவரை மிகவும் நோகடித்துள்ளனர்.

ஜனவரி மாதம் சசிகலாவுக்கு ஆதரவு, பிப்ரவரியில் பன்னீருக்கு ஆதரவு, மார்ச்சில் தனித்துப் போட்டி, கடைசியாக தினகரனுக்கு ஆதரவு என அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றியது குறித்து துருவிதுருவி விசாரித்துள்ளனர்.

அதோடு நீங்கள் என்ன வாங்கினீர்கள்? எப்படி வாங்கினீர்கள், என்பதற்கான எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. எனவே, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுங்கள். தினகரனிடம் வாங்கிய 5 கோடியும், எடப்பாடி பழனிச்சாமியிடம் வாங்கிய 2 கோடியும் எங்கே? என கேட்டு நெருக்கியுள்ளனர்.

இதன்போது 5 கோடி ராடான் நிறுவனத்தில் வந்த லாபம். இரண்டு கோடி சினிமா நண்பர் ஒருவரிடம் வாங்கிய கடன் என்று ஒரு தயாரிப்பாளர் பெயரை சொல்லி அப்போது சமாளித்ததை அடுத்து, சரத்குமாரை அனுப்பிவிட்டு, ராதிகாவின் நிறுவனமான ரேடான் டி.வி.யில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

இதனால் பயங்கர அப்செட்டான ராதிகா, ’என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டீர்கள் என சரத்குமாரை திட்டி தீர்த்து இருக்கிறார். இதை எப்படி சமாளிப்பது? என்று யோசித்த சரத்குமாருக்கு, நாடார் சமூகத்தை சேர்ந்த சிலர், தமிழிசையை பார்க்க சொல்லி ஐடியா கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து , சரத்குமாரின் ஆதரவாளர் ஒருவர் தமிழிசை வீட்டின் கதவை தட்ட , தமிழிசைஇந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்னையை சரி செய்திருக்கிறார்.

அந்த பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பிறகு தமிழிசை மீது பற்றும் பாசமும் கூடிப்போன சரத்குமார் – ராதிகா அதன் பிறகு தமிழிசையை அடிக்கடி போய் சந்தித்து பேசி வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர்.

கடந்த 8ம் தேதி பதவியேற்றபோது அந்த விழாவில் சரத்குமாரும், ராதிகாவும் கலந்து கொண்டனர். சரியாக 11 நாட்களே ஆன நிலையில் மீண்டும் பழைய நன்றியுடன் மீண்டும் சென்று தமிழிசையை அவர்கள் இருவரும் சந்தித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஆண்மை குறைவு போக்கும் அற்புதமான 21 மூலீகை!
Next articleநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு போலீஸ் விசாரணை !