வெளிநாட்டு தூதுவர்கள் மத்தியில் மைத்திரி தெரிவித்த கருத்து! மஹிந்தவை இப்படித்தான் பிரதமராக்கினேன்!

0

நாட்டில் அமுலில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பிரதமரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் அணிசேரா கொள்கைளை கையாண்டு அனைத்து நாடுகளுடனும் வலுவான தொடர்புகளை முனனெடுத்துச் செல்லும்.

இலங்கையின் அபிவிருத்திக்காக அனைத்து நாடுகளின் உதவிகளையும் எதிர்பார்த்துள்ளோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் என சுமார் 40 பேர் கலந்துக்கொண்டதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டு மக்களில் 70 முதல் 75 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், மக்களின் இதய துடிப்பை அறிந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமை, ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் சகல இனங்களுக்கும் இடையிலான சகவாழ்வை தொடர்ந்தும் உறுதிப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமைத்திரியை மிகக் கடுமையாக வலியுறுத்துகிறது பிரித்தானியா!
Next articleதமிழர் தாயக பகுதியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள்!