வெளிநாட்டவர்கள் மாணவர்களின் முற்றுகையில் சிக்கி திணறிய சம்பவம்!

0

சீகிரியவில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சிக்குண்ட வெளிநாட்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சீகிரிய, கிபிஸ்ஸ வித்தியாலயத்தில் அதிபருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த பாடசாலையின் மாணவர்ககள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டர். வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சீகிரியாவுக்கு சுற்றுலா பயணம் வந்த வெளிநாட்டவர்கள் வீதியில் சிக்கியுள்ளனர்.

செல்ல வழியின்றி வெளிநாட்டவர்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீகிரியவுக்கு செல்லும் கிம்பிஸ்ஸ சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக நீண்ட நேரம் வீதியில் நிற்க வேண்டிய நிலை வெளிநாட்டவர்களுக்கு எற்பட்டுள்ளது.

Previous articleஇலங்கை ரூபாவின் பெறுமதி நீண்ட காலத்தின் பின்னர் திடீர் அதிகரிப்பு!
Next articleஇலங்கையில் செய்தியாளர்களிடம் மோசமாக பேசிய பாரதிராஜா! வைரமுத்து சர்ச்சை!