நாட்டில் அதிக அளவில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு காரணமான கொசுவை ஒழிப்பதில் அரசு மும்முரம்காட்டி வருகிறது . இருந்தபோதிலும்,கொசுவினால் ஏற்படும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.
டெங்கு வந்தவுடன் என்ன செய்வது என்பதை விட, வருமுன் காப்பது சிறந்தது அல்லவா….எனவே அதற்கு காரணமான கொசுவை முதலில் ஒழிப்போம்….
கொசுவை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் ?
ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில்
இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!
இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது புது வைரஸ் காய்ச்சல் தான் தற்போது வரபிரசாதமாக உள்ளது
இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???
அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!
அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!