ரோட்டுக் கடைகளில் காளான் சாப்பிடுபவர்களா நீங்கள் அப்டினா இது உங்களுக்குத்தான்.

0

காலம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சாலையோரங்களில் துரித உணவு என்ற பெயரில் முளைத்துள்ள கடைகள் பல. இந்த வரிசையில், பானிபூரி, மசால் பூரி, பேல் பூரி காளான் போன்ற பதார்த்தங்களும் அடங்கும்.

குறைவான விலையில் மிகுந்த சுவை தரக்கூடியது என்பதால் இதற்கு மவுசு அதிகம்.

இந்த உணவுகளின் சுவைகளை மட்டும் ருசித்து பார்க்கும் நாம் இவற்றை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து கவலைபடுவதில்லை.

பெரும்பாலான கடைகளில் காளான் என்ற பெயரில் விற்கப்படுவது காளான் இல்லை என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்.

காளான் இல்லை என்றால் வேற என்ன? என்று தானே கேட்கிறீர்கள்

முட்டைகோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து எண்ணையில் வடைபோல பொறித்து எடுப்பதை தான் காளான் என்று விற்பனை செய்கிறார்கள். மேலும், இதனுடன், சிவப்பு நிறமேற்றுவதற்காக கலர் பவுடர், காரமாக இருப்பதற்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து வாணலியில் ஊற்றிய கலவை வேகவைத்து தட்டில் பறிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்ந்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது. இதுவே காளான் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்து அதிகமாகி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleபுற்று நோய் மற்றும் இதய நோயை தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி!
Next articleமதிய உணவு சாப்பிட்டாச்சா? மறந்து போய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க!