அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என்ற விபரீத பரிசோதனையில் இறங்கிய நபர் ஒருவர் யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இதில் உயிரிழந்துள்ளார்.
இவர் வரும் வழியில் அலரி விதையை உண்டதாகவும், அதனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என அறிவதற்காகவே அதனை சாப்பிட்டதாகவும் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நபர் வாந்தி எடுத்துள்ளதுடன், மிகுந்த சோர்வுடனும் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த இறப்பு தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.