மஹிந்த அரசுக்கு எச்சரிக்கை! இன்று ஸ்தம்பிதம் அடையவுள்ள கொழும்பு நகரம்!

0

தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

நாட்டு மக்களை ஒன்று திரட்டி இன்றைய தினம் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் சட்டவிரோதமானதெனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதா அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிக்கான குரல் கொடுக்கும் மக்களின் சக்தியை இன்று பிற்பகல் 12.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் கூடுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது,

இன்றைய தினம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு 50000க்கும் அதிகமானோர் கொழும்பில் ஒன்று கூடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் அலரி மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் இன்றையதினம் தீவிர பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleசம்பந்தன் மஹிந்தவை சற்றுமுன் நேரில் சென்று சந்தித்து பேசிய விடயங்கள் வெளிவந்தன!
Next articleஇலங்கையை விட்டு தப்பியோடிய ஆபத்தான நபர்கள்!