பாடசாலை மாணவர்களுக்கு கொண்டுவரப்படவுள்ள மாற்றம்! அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!

0

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறையில் மீளவும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

பாடசாலை மாணவ மாணவியருக்கான இலவச சீருடை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு சீருடைக்கான வவுச்சர்களை வழங்கி வந்தது.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்த வவுச்சர் முறையை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

பழைய முறையில் நேரடியாக மாணவ மாணவியருக்கு சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலை மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்!
Next articleகொழும்பிலிருந்து சொகுசு காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!