பின்னணி பாடகி சின்மயியை அண்மைகாலமாக பலரும் நினைவில் வைத்திருப்பார்கள் தானே. Me too ல் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்தார்.
சமீபத்தில் தான் இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. நேற்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் நர்மதை நதிக்கரையில் 182 மீட்டர் (597 அடி) நிறுவப்பட்டது.
இதில் கீழே பல மொழிகளில் ஒற்றுமைக்கான சிலை என பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் தவறாக எழுதப்பட்டிருந்தது. இது சர்ச்சையானது. சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்தன.
தற்போது இதை பார்த்து சின்மயி தலையில் அடித்துக்கொண்டதை Emoji ஆக பதிவிட்டுள்ளார்.