தந்தை – மகள் மீது கொடூர தாக்குதல்! யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

0

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொள்ளையர்களினால் கூர்மையான ஆயுதங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளைடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்களை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமழை காலம் ஆரம்பிச்சாச்சு! வீட்டில் கொசுகளை விரட்ட கொசுவிரட்டி செய்முறை பதிவு!
Next article3 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை! இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை!