பாலியல் தொல்லைகள் குறித்த விஷயங்கள் கேட்கும் போது மனம் பதறுகிறது. அதிலும் நடிகைகள் குற்றம் சாட்டும் பிரபலங்கள் விவரம் கேட்கும் போது இவரெல்லாம் இப்படி செய்கிறாரா என்று மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இப்போது தானும் 4 வருடங்களாக பாலியல் தொல்லை அனுபவித்ததாக கூறியுள்ளார் நடிகை சுனைனா.
ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, எனது பள்ளிக்கு ஆட்டோவில் தான் செல்வேன், எல்லா குழந்தைகளை போல முன்னே உட்கார அனைவருக்கும் பிடிக்கும்.
அப்படி உட்காரும் போது அந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் மோசமாக நடந்திருக்கிறார், அப்போது எனக்கு தைரியமும் இல்லை, பெற்றோர்களிடம் கூறவில்லை. இதேபோல் 7ம் வகுப்பில் இருந்து 10வது வரை 4 வருடங்கள் அணுபவித்தேன் என்று கூறியுள்ளார்.
சின்மயி பாலியல் தொல்லை குறித்து தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்ததை தொடர்ந்து அனைவரும் தங்களது விஷயத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.