கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு காரொன்று இன்று அதிகாலை விபத்திற்கு இலக்காகியுள்ளது.
தீபாவளி கொண்டாடுவதற்காக மூன்று இளைஞர்கள் பொகவந்தலாவ நோக்கி பயணித்த காரே மண்மேட்டில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் காரில் பயணித்த இளைஞர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.