கூந்தல் உதிர்வு அதிகமாக இருக்கிறதா? வீட்டிலேயே தயராரிக்கப்படும் ஷாம்புக்கள் செய்முறை இங்கே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்திப் பாருங்கள்.
முடி உதிர்தல்தான் பெரும்பாலோனோருக்கு பிரச்சனை. என்ன செய்தாலும் முடி உதிர்தல் நிற்காது. அந்த ஸ்மாயங்களில் கடைகளில் வாங்கும் ஷாம்புவும் முடி உதிர்தலுக்கு காரணம்.
ஷாம்பு என்றால் நுரை வர வெண்டும் என்ற தவறான எண்ணத்தால் கெமிக்கல் நிறைந்த ஷாம்புவை உபயோகப்படுத்தி தலைமுடியை குறைக்கச் செய்கிறோம்.
ஷாம்புக்களில் நுரை வரத் தேவையில்லை. அழுக்கை நீக்கினாலே போது. அவாறு தலைமுடியின் பிசுபிசுப்பை நீக்கி, முடி உதிர்தலை முற்றிலும் கட்டுப்படுத்தும் ஒரு எளிய முறையை இங்கே சொல்லப் போகிறோம்
தொடர்ந்து படியுங்கள். இதற்கு இங்கே சொலப்பட்டிருக்கும் 4 பொருட்கள் தான் எப்போதும் நீங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அவை சமையல் சோடா, ஆப்பிள் சைடர் வினிகர், முட்டை,
ரெசிபி – 1
தேவையானவை :
முட்டை – 2
சமையல் சோடா – 3 ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் – அரை ஸ்பூன்.
செய்முறை :
முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். நுரைவரும் வரை அடித்து அதில் சமையல் சோடா, ஆப்பிள் சைடர் வினிகரை கலக்குங்கள். இதனால் பொங்கி வரும்.
இந்த கலவையை தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடி மிக மிருதுவாகும். மசாஜ் செய்தபடி தலையை அலசுங்கள். அழுக்குகள் நீங்கி சுத்தமான மிருதுவான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.
ரெசிபி – 2
தேவையானவை :
ஆப்பிள் சைடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
நீர் மற்றும் கேஸ்டைல் சோப் – சம அளவு- கால் கப்
தேயிலை மர எண்ணெய் – கால் ஸ்பூன்
புதினா எண்ணெய் – சில துளி (தேவைப்பட்டால்)
செய்முறை :
நீர் மற்றும் கேஸ்டைல் சோப்பை சம அளவு எடுத்து அதனுடன் மேற்கூறிய அளவில் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ததேயிலை மர எண்ணெயை கலக்குங்கள்.
தேவைப்பட்டால் புதினா எண்ணெயை சேர்க்கலாம். இதனை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரத்தில் கழுவுங்கள். மிக அற்புத ரிசல்ட் இது தரும். வாரம் இரு முறை பயன்படுத்தலாம்.
பலன்கள் இந்த 3 பொருட்களுமே எந்தவித பக்கவிளைவுகளை தராதது. அழுக்கையும் நச்சுக்களையும் நீக்கும். கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும். வாரம் இருமுறை இந்த செயலை செய்து பாருங்கள். வியக்கும் வகையில் உங்கள் கூந்தல் பொலிவு பெறும்.