பெண் பெயரில் பழகி பாலியல் உறவுக்கு அழைத்த நபர் குறித்து பிக்பாஸ் வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் வைஷ்ணவி. பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரியும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் தொந்தரவு குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் பெண் ஒருவர் வைஷ்ணவியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் வைஷ்ணவியின் இன்பாக்ஸில் உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அக்கா என்று அழைக்கும் அந்தப் பெண், தாம்பரத்தில் வசிப்பதாக கூறுகிறார். பின்னர் திடீரென நாம் ஏன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வைஷ்ணவி இதைச் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்பாலின உறவு தவறில்லை என பிரிவு 377 நீக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது இதுபோன்ற அழைப்புகள் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், இதுபோன்ற போலி ஐடி-யில் உலவும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.