தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரில் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மை காலமாக கொழும்பு அரசியல் கடும் குழப்பங்களுக்கு மத்தியில் சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், குறித்து சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.