உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியை நிறுத்திய அதிபர் டிரம்ப். Drump

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஐ.நா. அமைப்பினை குற்றம் சாட்டியுள்ளார். தனது அடிப்படை பணியினை செய்ய தவறிவிட்ட உலக சுகாதார அமைப்பே நடந்த தவறுக்கு பொறுப்பாகும் என்று கூறினார்.
அதவது ”கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் தவறான நிர்வாகம் செய்தது மற்றும் இந்த தொற்று குறித்த உண்மைகளை மூடிமறைத்தது என உலக சுகாதார அமைப்பின் பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வரும்வேளையில், இந்த அமைப்புக்கு வழங்கப்படும் நிதியினை நிறுத்திடுமாறு எனது நிர்வாகத்துக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: