இயக்குனர் பாரதிராஜா தற்போது இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் வைரமுத்து சிக்கியுள்ள பாலியல் சர்ச்சை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கோபமாகி செய்தியாளர்களை ஒருமையில் பேசியுள்ளார்.
பாலியல் தொந்தரவு கொடுத்தத நீ பாத்தியா ? நீ பாத்தியா ? கேள்விபட்ருக்க ; கேள்விபட்டதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
சினிமா தொழில் சம்பந்தமாக எது வேண்டுமானாலும் கேளுங்கள், மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என கூறி எழுந்து சென்றுவிட்டார்.
#Metoo விவகாரம் சூடான இயக்குனர் இமயம் பாரதிராஜா
ஊடக சந்திப்பிலிருந்து இடைநடுவே எழுந்து சென்றார்.@Chinmayi #lka #MeeToo #Vairamuthu pic.twitter.com/0Dycmpvsc5— Kajeepan Vigneswaran (@kajeepanv) October 15, 2018