மனைவி எனக்கு செய்த துரோகம்: தற்கொலை செய்த கணவரின் உருக்கமான கடிதம்!

0

இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் மோகன் குமார் (34). இவர் மனைவி லட்சுமி. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.

மோகன் கணக்காளராக கடந்தாண்டு வரை வேலை செய்து வந்த நிலையில் பின்னர் வேலையை விட்டுள்ளார்.

லட்சுமி தனியார் கேஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது உயர் அதிகாரியுடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் அதை மோகன் கண்டுப்பிடித்துள்ளார்.

இதிலிருந்தே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மோகன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மோகன் சடலத்தை கைப்பற்றிய நிலையில் அவர் எழுதி வைத்திருந்த 24 பக்க கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், என் மனைவி எனக்கு துரோகம் செய்ததோடு, அதிமாக என்னை துன்புறுத்தினாள், தொடர்பை விட்டுவிடும் படி அவளின் உயர் அதிகாரியான அமித் சேத்திடம் நான் கூறியும் அவர் கேட்கவில்லை என எழுதப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை அடிப்படையாக வைத்து பொலிசார் லட்சுமி மற்றும் அமித் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர்: வெளியான பகீர் பின்னணி!
Next articleகணவரும் மாமியாரும் சேர்ந்து செய்த மோசமான செயல்: உயிரை விட்ட புதுப்பெண்!